Thursday, May 29, 2025

கொலம்பஸ்

 இத்தாலியில் உள்ள துறைமுக நகரமான ஜெனிவாவில் கம்பளி நெசவு செய்து வியாபாரம் செய்யக்கூடிய டொம்னிகோ கொலம்போ (Domenico Colombo) எனும் நெசவாளிக்கு மகனாகப் பிறந்தவர் தான் கிறிஸ்டோஃபர் கொலம்பஸ். டொம்னிகோ அவர்கள் தன்னுடைய மகனும் ஒரு நெசவாளியாக தான் வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், கொலம்பஸின் கனவுகள் இன்னும் பிரம்மாண்டமாக இருந்தது.

  • v  நிறைய கடற்பயணங்கள் மேற்கொள்ள வேண்டும்.
  • v  புதிய புதிய தீவுகளை கண்டுபிடிக்க வேண்டும்.
  • v  பெருமளவில் பணம் சம்பாதிக்க வேண்டும்.

 


 இது போன்று அவரது கனவுகள் பெரியதாக இருந்தன. தன்னுடைய கனவுகளுக்கு ஏற்றமாதிரி சிறு சிறு தீவுகளுக்கு வணிகக் கப்பலில் வணிக பயணம் மேற்கொண்டார். அந்த பயணங்கள் மூலமாக கடல் பற்றியும் கப்பல் பற்றியும் மாலுமிகள் பற்றியும் நிறைய தெரிந்துக் கொண்டார். இருந்தாலும் என்றாவது ஒருநாள் கடல் மார்க்கமாகவே இந்தியாவை அடைய வேண்டும் என்று பெரிய கனவுகளையும் அவர் கண்டார்.

பிறகு பல புத்தகங்களையும் பல வரைப்படங்களையும் திரட்டி தான் இப்பொழுது இருக்கக்கூடிய பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி பயணம் செய்தால் இத்தனை நாட்டிக்கல் தூரத்தில் இந்தியாவை கடல்மார்க்கமாகவே அடையலாம் என்று அவர் கண்டுபிடித்தார்.

இதனை கண்டுபிடித்ததும் தன்னுடைய இந்த பயணத் திட்டத்தைக் காட்டி பல்வேறு சிறு வணிகர்களிடம் கப்புலும், தேவையான உணவுப் பொருட்களும் வாங்க பொருளுதவி செய்யுமாறு வேண்டினார். ஆனால், யாருமே அவருக்கு உதவவில்லை.


இத்தாலி போர்ச்சுக்கல் என்று பல்வேறு நாடுகளுக்கு சென்று பல்வேறு மன்னர்களிடம் பேசிப்பார்த்தார். ஆனால், யாருமே அவருக்கு உதவ தயாராக இல்லை.

மாதங்கள் வருடங்களானது. இருந்தபோதும், கொலம்பஸ் தன்னுடைய முயற்சியைக் கைவிடவில்லை. தொடர்ந்து முயற்சி செய்துக் கொண்டே இருந்தார். சில வருடங்கள் கழித்து அவருடைய பயணத்திற்கு தேவையான கப்பல்களையும், கப்பல் நிறைய உணவுப் பொருட்களையும் வழங்க ஸ்பெயின் நாட்டின் இளவரசி இசபெல்லா முடிவு செய்தார்கள்.

இப்பொழுது தான் கொலம்பஸ்க்கு புது நம்பிக்கையே பிறந்தது. ஆனால், அதே நேரத்தில் புது சிக்கலும் பிறந்தது. அது என்னவென்றால், கொலம்பஸ் உடன் கடல் பயணத்தில் ஈடுபட மாலுமிகள், அந்த நாட்டு மக்கள் என்று யாருமே முன்வரவில்லை. இந்தக்காலத்திலேயே பயணம் செய்ய சிலர் பயப்படுகிறார்கள். அந்தக் காலத்தில் கிட்டத்தட்ட ஐநூறு வருஷத்துக்கு முன்பு அதுவும் ஆபத்தான கடல் பயணத்திற்கு யார் தயாராக இருப்பார்கள்?

’நாம் புது வரலாறு படைக்கப் போகிறோம். இதுவரை கடல்மார்க்கமாக இந்தியாவை யாருமே வந்தடைந்ததே இல்லை. நாம் மட்டும் அதனை சாதித்து விட்டோம் என்றால் சரித்திரத்தில் என்றுமே நம்முடைய பெயர் நிலைத்து நிற்கும். அது மட்டுமல்லாது, வரும்பொழுது நாம் பொன், பொருளோடு திரும்ப வரலாம்’ என்று அவர் அனைவரிடமும் சொல்லிப் பார்த்தார்.

ஆனால், அவருடன் ஆபத்தான கடற்பயணம் மேற்கொள்ள யாருமே தயாராக இல்லை.


 என்னடா இது? இத்தனை வருடங்கள் கழித்து இப்பொழுது தான் நமக்கு கடல் பயணம் செய்ய தேவையான பொருளுதவி கிடைத்துள்ளது. ஆனால், இந்த சமயத்தில் இப்படி ஒரு சிக்கலா? என்று அவர் சோர்ந்துப் போகவில்லை. கொலம்பஸ் இந்த இடத்தில் தான் வித்தியாசமாக சிந்தித்தார்.

மரணத்திற்கு பயந்துதானே சாதாரண மனிதர்கள் பயணத்திற்கு வர மறுக்கிறார்கள். ஏறகனவே மரணத்தின் விளிம்பில் இருக்கக்கூடிய மரணத் தண்டனைப் பெற்ற சிறைக் கைதிகளை நம்மோடு அழைத்துக் கொண்டு சென்றால் என்ன? என்று வித்தியாசமாக சிந்தித்தார் கொலம்பஸ்.

தன்னுடைய இந்த வித்தியாசமான சிந்தனையை சிந்தனையாக மட்டும் வைத்திருக்காமல் உடனே அரசவையிலும், மரணத் தண்டனைப் பெற்றிருந்த கைதிகளிடமும் பேசி கடல் பயணத்திற்கு அனுமதி வாங்கினார்.



பிறகு 1492-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி மூன்று கப்பல்களோடு கொலம்பஸ் தன்னுடைய கடற்பயணத்தைத் தொடங்கினார். அவர் கிழக்கு நோக்கி பயணிப்பதற்கு பதிலாக மேற்கு நோக்கி திரும்பிவிட்டார். ஆனால், அந்த பயணம் தான் அமெரிக்காவைக் கண்டுபிடிக்க வழிவகுத்தது.

அமெரிக்காவைக் கண்டுபிடித்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமை கொலம்பஸ்க்கு கிடைத்தது. இவருடைய இந்த பயணம் தான் போர்ச்சுக்கல், ஸ்பெயின், இங்கிலாந்து என்று பலவேறு ஐரோப்பிய நாட்டவர்கள் அமெரிக்காவில் குடிபெயர காரணமாக அமைந்தது.

தன்னுடைய வாழ்நாளில் இதேபோல் நான்கு முறை அமெரிக்காவிற்கு பயணம் செய்தார் கொலம்பஸ். அவருடைய இந்த கடற்பயணம் தான் ஐரோப்பியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் இடையே வணிகப் போக்குவரத்து நடைபெற காரணமாக அமைந்தது.

கொலம்பஸ் அவர்களிடம் புதிதாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற பிரம்மாணடமான கனவு இருந்தது. ரிஸ்க் எடுத்து ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற துணிச்சலும் இருந்தது. ஆனால், அது மட்டும் போதுமா? யாரும் தன்னுடன் வரத் தயாராக இல்லாத போதிலும் அந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற மாத்தி யோசிக்கும் திறனும் இருந்தது.



நீங்களும் உங்கள் இலக்கை நோக்கி பயணிக்கும் பொழுது பல பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆனால், அதனை எப்படி சமாளிக்கலாம் என்று நீங்களும் வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். இதுபோல் மாத்தி யோசிக்கும் திறன் உங்களிடமும் இருந்தால், உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.

All the best…!

0 comments:

Post a Comment